Saturday, September 25, 2010

கத்தார் - ஒரு அலசல்....2

கத்தார் - ஒரு அலசல்....1 -ல் கத்தாரை பற்றிய ஒரு அறிமுகமும், 1940களுக்கு    பிறகு கத்தாரின்   வளர்ச்சியும் அதற்கு  முக்கிய காரணமான இயற்கை வாயு மற்றும் எண்ணை வளத்தை பற்றியும் அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி முறைகளையும் மேலும் பணிநிமிர்தமாக   இங்கு வருவோர்கள் எதிர்கொள்ளும்  சவால்களை முடிந்த அளவு சுருக்கமாக பார்த்தோம். இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் நானும், நம் நாட்டவரும், மற்ற நாடுகளை சேர்ந்த குறிப்பாக சொகுசானவர்கள் என நாம் கருதும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கே ஓடி வருவது ஏன்???????????
 













இதற்க்கு பல காரணங்கள் சொல்லலாம், ஆனால் முதல் முக்கியமான காரணம் வருமான வரி கிடையாது  என்பதே!!!! உலகிலேயே  வரி இல்லாத/குறைந்த நாடுகள் வரிசையில் கத்தார் முதலிடம் வகிக்கிறது. வரி அதிகம் வசூலிக்கும்  நாடுகளில் முதல் பத்து இடங்களை பார்த்தால் ஐரோப்பிய நாடுகள்தான் அதிகமாக உள்ளது. இதனால்தான் இவர்கள் இங்கு பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஐரோப்பிய பாஸ்போர்ட் வைத்திருந்தால் போதும் இங்கு படிப்பு, தகுதி, திறமை,  அனுபவம் இரண்டாம் பட்சம்தான். நேராக மேனேஜர்தான்! அது கிளீனிங் வேலையாயிருந்தாலும் சரி இவங்கதான் கிளீனிங் மேனேஜர். அப்படி ஒரு மதிப்பு இங்க. நம்ம ஆளுங்க முழு கால்சட்டை அணிந்து சென்றாலும் உள்ளே செல்லமுடியாத  சில இடங்களில் இவர்கள் அரை கால்சட்டை மற்றும் செருப்புடனே உள்ளே செல்லலாம். (நம்ம ஊர்லையே இந்த கொடுமையெல்லாம் இருக்கும்போது இது ஒன்னும் பெரிதல்ல!!!) இதில் கவனிக்க வேண்டிய  ஒரு முக்கிய செய்தி இவர்களில் பெரும்பாலனோர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. அதாவது பிறப்பால் இல்லாமல்  வெறும் பாஸ்போர்டால் ஐரோப்பியர்கள் ஆனவர்கள். ஐரோப்பிய நாடுகளை  சுற்றி இருக்கும் மற்ற  நாடுகளில் இருப்பவர்கள்  இங்கே உள்ளே  சென்று (குறிப்பாக பிரான்ஸ் நாட்டை கூறலாம்) எப்படியாவது பாஸ்போர்ட் வாங்கி விடுவார்கள் அதற்கு பல வழிகள் கூறுகின்றனர். ஐரோப்பிய பாஸ்போர்ட் காரர்களுக்கு  என தனி சம்பள நிர்ணயம் செய்கிறார்கள் பிறகென்ன ராஜ வாழ்க்கைதான். கத்தாரில் வரி கிடையாது என்பது இவர்களுக்கோ    , மற்ற நாட்டவர்க்கோ பெரிய விஷயமாக  இருக்கலாம்  ஆனால் நமக்கு அதுவும் ஒரு சாதாரண விஷயம்தான்! ஏன்னா நாமதான் நம்  நாட்டிலேயும் வரி  கட்டுவதிலேயே! நம்மில் பலபேருக்கு இந்தியாவின் வரி சட்டங்களை பற்றி   தெரியாது . அப்படியே தெரிந்துகொள்ள ஆசைபட்டாலும் வரி கட்டாமல் எப்படி ஏமாத்தாலம் என்பதைத்தான் கற்றுக்கொள்ள்வோம். (ஸ்ஸ்ஸ்ஸ்.... உண்மை சுடுது) அதனால் நம்மவர்களுக்கு அதையும் தாண்டி  இருக்கும் சில காரணங்கள் இருக்க வேண்டும் அது என்ன?

தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக நம்மவர்கள் இங்கு வருவதற்கு காரணம் உலகறிந்ததே! குறைந்த பட்சம் ஏதாவது படித்துவிட்டு வருபவர்கள்  -மக்கள் தொகை, வேலையில்லா திண்டாட்டம், படிப்புக்கு தகுந்த வேலை. வேலைக்கு தகுந்த சம்பளம் இப்படி ஒரு பக்கம் இருக்கிறது. இந்த பிரிவில் வருபவர்கள் தப்பித்தார்கள். எதிர்பார்த்த வேலை, கைநிறைய சம்பளம் சொகுசான வாழ்கை என்று கூறமுடியாவிட்டாலும் ஓரளவிற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்துவிடும். ஆனால் படிக்காமல் வறுமை, குடும்ப சூழல், அறியாமை போன்ற காரணங்களால் இங்கு வருபவர்களுக்கு இது பூலோக நரகம்தான். ஆனால் அப்படி வருவோர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம் குறிப்பாக இந்தியர்கள். இதற்கு இவர்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என வட்டிக்கு பணம் வாங்கி ஏஜெண்டுகளிடம் கொடுத்து வருகிறார்கள்.  இருந்தும் சொற்ப சம்பளம்,  பல பேர்க்கு   சொன்ன வேலை/சம்பளம் கிடைக்காது. 12 முதல் 16 மணி நேரம்  வேலை. உணவு,தங்கும் இடம், போக்குவரத்து என ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சில இடங்களில் ஐந்து ஆண்டுகள் கழித்துதான் ஊருக்கு திரும்ப முடியும் என்பது வரை இவர்கள் படும் பாட்டை இது போல பத்து பதிவு போட்டாலும் பத்தாது.

"தோஹா" கத்தாரின் தலைநகரம் மட்டுமல்ல கத்தாரின் ஒரே நகரமும் கூட! இங்கு மட்டுமே பல அடுக்கு மாடி கட்டிடங்களை காணலாம் மற்றபடி இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில ஷாப்பிங் மால் இருக்கும். (ஷாப்பிங் மால்னா   தமிழ்ல பண் கடை கட்டிடமாம் ரொம்ப சிரமப்பட்டு கண்டுபுடிச்சேன்). உள்ளநாட்டு மக்களில் 80% க்கும் அதிகமானோர்  இங்குதான் வசிக்கின்றனர். வெறும் 132sq/km பரப்பளவில் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் இங்கேயே வசிக்கின்றனர் .   மிச்சமிருக்கும் 11,305sq/km பரப்பளவில் கிட்டதட்ட ஏழு லட்சம் மக்களும், கட்டுமான பணிகளுமே நிறைந்ததுதான் கத்தார்.
கத்தாரில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதியை பற்றி கட்டாயம் இங்கு சொல்லியாகவேண்டும். மூன்று  வார்த்தையில் சொல்லிடலாம்... மொக்கை!மொக்கை!! மொக்கை!!! ஆம்  தனக்கென வாகனம் இல்லாதவர்கள் வெளியில் செல்வதென்பது இயலாத ஒன்று. நகரத்திற்குள் ஓரளவு பரவாயில்லை ஆனால் மற்ற கிராமங்களில் இருப்பவர்கள்,  சைட்டில் இருப்பவர்கள் நிலைமை??? அவர்கள் பணி புரியும் கம்பெனி எப்பொழுது வண்டி அனுப்புகிறதோ தலைஎழுத்து  அப்போதுதான் வெளியே செல்லமுடியும், தேவையானவற்றை வாங்க முடியும்.
பொதுவாக அனைத்து கம்பெனிகளும் வார கடைசி (அதாவது இங்கு வியாழ கிழமை  மாலை தொடங்கி வெள்ளிகிழமை மாலை வரை) தோஹாவை நோக்கி பேருந்தை இயக்குவர், அவரவர் பணியாளர்களுக்கு மட்டும். ஆறு நாட்கள் அடைபட்டு கிடந்தவர்கள் திறந்துவிட்டால் அவ்வளவுதான் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தோஹாவிற்கு  திருவிழாகோலம் பூட்டி திக்குமுக்காட வைத்துவிட்டுத்தான் திரும்புவார்கள். அன்றைய நிலையில் பெட்டிகடைகளில் தண்ணீர் கிடைப்பதே கஷ்டம். இதுல சாப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம். நான் வெளியில் தங்கி இருந்தவரை பல வெள்ளி இரவு பட்டினிதான்.  கத்தார் என்றவுடன் இங்கு வசித்த பலருக்கு (எனக்கும்) இந்த பிரச்சனைதான் முதலில் ஞாபகம் வரும் என்பதற்கு போன பதிவின் கமெண்ட்ஸ்  பகுதியில் ராஜ்குமார் அவர்களின் கமெண்ட்ஸ்  ஒரு உதாரணம்.
இப்படியொரு நிலைமை இருந்தாலும் 2022 உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது கத்தார். வாழ்த்துக்கள் ஆனால் ஒரே ஒரு சந்தேகம், உதாரணதிற்கு ஒரு பத்தாயிரம் பார்வையாளர்கள் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஒரு வாரத்திற்குள் வந்து குவிந்தார்கள் என்றால் அவர்களுக்கு தனித்தனியாக வாகனங்கள் ஏற்பாடு செயவார்களா? அல்லது அனைவரும் மைதானத்திலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதானா? போகட்டும் அதற்கு இன்னும் ஒரு மாமாங்கம் இருக்கிறது அதற்குள் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மனமிருந்தால் மார்கம் உண்டு என்பார்கள் இவர்களை பார்த்தால் பணம் இருந்தால் மார்கம் உண்டு என சொல்ல தோன்றுகிறது எனக்கு.

சில முக்கியமான விஷயங்கள்:
  • உலகத்தின் ஒரு சில மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.
  • 
    H .H .Hamad bin Khalifa Al Thani
  • டிசம்பர்-18-1878 முதல் இன்று வரை அல்-தானி என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-18 கத்தார் தினமாக (நேஷனல் டே) கொண்டாட படுகிறது.
  • இஸ்லாம் மதத்தை கடைபிடிக்கும் இவர்களின் தாய் மொழி அரபிக் ஆகும்.
  •  
  • எங்கு சென்றாலும் ஆண்களும் பெண்களும் தங்களது பாரம்பரிய உடை அணிந்து  செல்வது ஒரு சிறப்பாக  கூறலாம். (நாம எப்படி? எத்தனை  பேருக்கு  வேஷ்டி  ஒழுங்கா கட்ட தெரியும்?)
  • வாயு மற்றும் எண்ணை வளங்கள் கண்டுபிடிக்கும் முன்பு வரை மீன்பிடித்தல் மற்றும் முத்து எடுத்தல் (ரஜினி படம் இல்லைங்க) இவைதான் இவர்களின் பிரதான தொழில்.
















  • கிட்டத்தட்ட 1966 வரை இங்கு நம் இந்திய ரூபாய் நோட்டுகள்தான் (gulf rupees) புழக்கத்தில் இருந்திருக்கிறது.
  • தற்போது கத்தார்  ரியால்ஸ் நடைமுறையில் உள்ளது (1QR = INR  12 ~ 13 )





  • ஒட்டகம் மற்றும் குதிரை ரேஸ் இங்கு பழமையான மற்றும் பிரபலமான விளையாட்டும் கூட.
     



  • 2006 ம் ஆண்டு 15 ஆம் ஆசிய விளையாட்டு   போட்டிகள்  கத்தாரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்காக பல புதிய விளையாட்டு மைதானங்கள்   கட்டப்பட்டன.

    • 2011 ம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளது.


    கத்தார் ஒரு காலத்தில்......

     இது போன்ற இன்னும் பல கத்தாரின் புகைப்படங்களை காண இங்கே க்ளிக்கவும்

    கத்தாரை பற்றி நான் கேட்டு, படித்து, பார்த்து அறிந்துகொண்ட அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். மறக்காமல்  உங்கள்  கருத்துக்களை  என்னுடன் நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    அடுத்த பதிவும் கத்தார பத்திதாங்க! இங்கு இருக்கும் ஒரு முக்கியமான பண் கடை கட்டிடம்  அதாங்க ஷாப்பிங் மால் பற்றியது. உங்களுக்காக  நானே  எடுத்த  சில புகைப்படங்களுடன்......   





    Thursday, September 16, 2010

    கத்தார் - ஒரு அலசல்....1

    கத்தார் வந்து மூன்று வருடங்கள் நெருங்கிவிட்டது. கத்தார் என்றவுடன் எனக்கு மட்டுமல்ல பொதுவாக (வெளி நாட்டில் வேலை செய்கிறேன்  என்ற  பேரில்)  இங்கு வேலை செய்யும் என்போன்றவர்களுக்கு என்னென்ன விஷயங்கள்  நினைவிற்கு வரும்   என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.









    கத்தார் நம் தமிழகத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தையும்  ஒரு  சில சிறு கிராமங்களையும் சேர்தாற்போல இருக்கும் ஒரு குட்டி நாடு. வெறும் பதினேழு இலட்சத்தை நெருங்கிகொண்டிருக்கும் மக்கள் தொகை இதில்  40 சதவீதத்திற்கும் அதிகமாக இந்தியர்கள் (என்னையும் சேர்த்து) வாழும்  இல்லை இல்லை வேலை செய்யும்  ஒரு நாடு.  மேலும்  உலகின் ஏறத்தாழ அனைத்து  நாடுகளை  சேர்ந்த மக்களும், 20 சதவீகிதம் உள்நாட்டு மக்களும் இந்த மக்கள் தொகையில்  அடங்குவர்.

    1940 களுக்கு முன்பு வரை  ஏழை  நாடுகளின் பட்டியலில் இருந்த  கத்தார்  தற்போது உலக பணக்கார நாடுகளின் வரிசையில் இரண்டாம்    இடத்திற்கு  அதிவேகமாக முன்னேறிவிட்டது!!!!.  இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஆம் இயற்கை இந்நாட்டிற்கு  அளித்த பரிசுதான்.....  கடல் என்ற அற்புத விளக்குக்குள்  அடைபட்டு கிடக்கும்  இயற்கை வாயு  மற்றும் எண்ணை வளம் என்ற பூதம். இன்று எந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டிபடைப்பது இந்த பூதம்தான். பிறகென்ன அற்புத விளக்குதான் கையில்  கிடைத்துவிட்டதே  எடுத்து தேய்த்தால் பூதம் வரும் (அதாங்க இயற்கை வாயு  மற்றும் எண்ணை) வித்தா காசு வரும். ஆனால் அது அத்தனை சுலபமான காரியம் இல்லை. மேலோட்டமாக உங்களுக்காக......
    Offshore Oil Plotform
    Offshore Gas Platform
    
    நம்ம ஊர்ல எண்ணை  கிணறுன்னா  ஏதோ  வீட்டு  பின்புறத்தில்  இருக்கும் தண்ணீர் கிணறு போல இருக்கும்னு   இப்பவும் பாதி பேர்க்கும் மேல கற்பனை செய்துகொண்டிருகிறார்கள். மேலே உள்ள படத்தில் இருக்கும் பணி மேடைகள்தான் கடலுக்கு அடியில் பூமியின் அடுக்குகளுக்கு இடையே  நமக்கு தேவையான, தேவையற்ற,  பல வாயுக்களுடன்  கலந்து  இருக்கும் இயற்கை வாயுவையோ  அல்லது கச்சா எண்ணெயையோ  வெளியில் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கரையில்  இருக்கும் பணி தளங்களுக்கு குழாய்கள் மூலமாக  எடுத்து சென்று பல்வேறு   சுத்திகரிப்பு மற்றும் பல மாற்றங்களுக்கு  உட்படுத்தி நீர்மமாக்கபட்ட இயற்கை வாயு (LNG) , LPG , பெட்ரோல், டீசல்  அல்லது கச்சா எண்ணையாகவோ பெரிய  பெரிய தொட்டிகளில் (storage tank) நிரப்புகின்றனர். கீழே உள்ள படங்களை பார்க்கவும். 








    இந்த சைட்லதாங்க நான் மூன்று வருடமாக.... ம்கும் என்னத்த சொல்ல.
    கொஞ்சம் நான் எடுத்த படங்களையும் பாருங்க...
    One of the LNG sorage tank. Capacity : 140,000 m3
     இந்த தொட்டிகளிளிருந்து  பிரத்தியேகமான  கப்பல்கள்  மூலம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இப்படி.
    இந்த படங்களை பார்க்கும் போதே ஓரளவிற்கு இது எத்தனை கடினமான காரியம் என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். (இதைதான்  சும்மா வருவாளா சுகுமாரி தெரிஞ்சுகோடா சோமாறின்னு சொல்லுவாங்க). இதெல்லாம் எப்படி  சாத்தியமாகிறது என்று யோசித்தால் அதற்கு தெளிவான ஒரு பதில்.... இயற்கை  சக்தியை  மிக லாவகமாக கையாள தெரிந்த மனித சக்திதான். ஆம் அதற்காகத்தானே உலகின் அனைத்து  நாட்டை சேர்ந்த உழைப்பாளிகளும் இங்கு ஒன்று  கூடி  இருக்கின்றனர்.பல லட்சம் பேர்களின் உழைப்பு, பல ஆயிரம் பேர்களின் ரத்தம், பல நூறு பேர்களின் உயிர் இதுவே கத்தாரின் இந்த வளர்ச்சிக்கு முதல் படி என கூறினால் அது மிகையல்ல.     பொதுவாக ஒரு நாட்டின் ஒரு சில இடங்களில் கட்டுமானபணிகள் நடக்கும் ஆனால் இங்கு எண்ணை மற்றும்  இயற்கை வாயு உற்பத்தி/ஏற்றுமதி மற்றும் அதை சார்ந்த பணி தளங்களுக்கு (site) நடுவேதான் இந்த நாடே அமைந்திருக்கிறது.  உலகிலேயே அதிக இயற்கை  வாயு  கிடைக்கும்  நாடுகளின் தரவரிசை பட்டியலில் கத்தார் மூன்றாம் இடத்திலும் எண்ணை வளத்தில் பதிமூன்றாம் இடத்திலும் இருக்கிறது.(கவனிக்க: எண்ணை வளத்தில் மட்டும் இந்தியா இருபதாம் இடத்தில்  இருக்கிறது. அப்டியா!!!!!!!).
    ஒரு முறை இந்நாடிற்கு வேலைக்கு வந்துவிட்டால் போதும் சுற்றி சுற்றி எங்காவது வேலை வாய்ப்பு கிடைத்து  கொண்டே  இருக்கும்,  நாமே  போதும்  என்று  ஊருக்கு போனால்தான் உண்டு.  ஆனால் இதில் இருக்கும் ஒரு சில பிரச்சனைகள் என்னவென்றால்? முதலில் தட்ப வெப்பநிலை, சர்வ சாதாரணமாக 50oC வெப்பம் கூடவே காற்றின் ஈரப்பதம் என சொல்லகூடிய ஹுமிடிட்டி (humidity) 70%முதல் 80% வரை சேர்ந்து தாக்கும். அதாவது வெளியில் எந்த வேலையும்  செய்யமால்  அப்படியே இரண்டு மூன்று நிமிடங்கள் நின்றாலே மொத்த உடம்பும்,உடையும் வியர்வையில்  நனைந்தே போய்விடும். சில நிமிடங்களில் நம் உடம்பில் உள்ள மொத்த தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துவிடும் எப்போது வேண்டுமானாலும் மயங்கி விழுந்துவிடும் நிலைக்கு தள்ளப்படுவோம். அதோடு முடிந்து விட்டதா? இல்லை!! மணல் காற்று  அதிகமாக வீசும்  காலங்களில் இன்னும் கொடுமை கண், காது, மூக்கு, வாய் என எல்லா வழியகவும் பொடி மண்ணை உள்ளே வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு குளிர் இதிலும்  எந்தவித குறையும் இல்லாமல் 7oC க்கும்  குறைவாக  அதுவும்  நம்மை படுத்திவைக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்கள் மேற்சொன்ன எந்த பிரச்சனயும் இல்லாமல் ஓட்டிவிடலாம். இயற்கை படுத்தும் பாடு  ஒருபுறம்  இருக்க  நாம்  பணி புரியும் இடத்தின்  தன்மைகேற்ப, பலதரப்பட்ட வாயுக்கள், கெமிக்கல், ஆசிட் போன்றவற்றை சுவாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் பல பக்கவிளைவுகளின் தாக்கம்   பக்காவாக பிற்காலங்களில் தெரியும். இவ்வளவு  பிரச்னைகள்  இருந்தும் நானும், நம் நாட்டவரும், மற்ற நாடுகளை சேர்ந்த  குறிப்பாக சொகுசானவர்கள் என நாம் கருதும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கே ஓடி வருவது ஏன்???????????

    அடுத்த பதிவில் பார்ப்போம்........கத்தார் -  ஒரு அலசல்....2

    குறிப்பு: உங்களுக்கு பிடிச்ச மாதிரி எழுதனும்னு  ஆரம்பித்தேன் முடியாம   உங்களுக்கு புரியற மாதிரியாவது  எழுதுனும்னு போய்கிட்டே இருக்கேன் எப்படி இருக்குனு சொன்னா மேற்கொண்டு தொடர்வதர்ற்கு வசதியாக இருக்கும்   

    Tuesday, September 7, 2010

    ரஜினி ரசிகர்கள் மட்டும்தானா? மற்ற ரசிகர்கள்?

    இந்த வாரம் தமிழகதின் அல்லது  தமிழ்  நாள்/வார/மாத  இதழ்களின் முக்கிய செய்தி ரஜினியின் மகள் திருமண விழா,  அதற்கு  ரஜினி  தனது ரசிகர்களை அழைக்கவில்லை இருந்தும் சென்றவர்களை  உள்ளே அனுமதிக்கவில்லை,  இதனால் வெகுண்டெழுந்த ரசிகர்களின்  புலம்பல்கள், கடிதங்கள், எதிர்ப்பு வாசகங்கள், கண்ணீர் கதைகள் போதாத குறைக்கு ஏகப்பட்ட ஈமெயில் வேறு (எனக்கு ஒரே நாளில் பத்து பேரிடம் இருந்து).  இதெல்லாம் படிச்சப்பதாங்க  மல்லாக்க  படுத்துகிட்டு  எச்சில் துப்புவதுன்னா என்னான்னு புரிஞ்சிது.  இந்த கடுப்புதாங்க செந்திலா இருந்த என்னை இப்படி கவுண்டமணி போல் ஒரு பதிவு போட தூண்டியது.

    என்னடா விளம்பரம்! இந்த சினிமாகாரங்கதான் தனக்கு தானே போஸ்டர் அடிக்கிறது கட்-அவுட் வக்கிறதுன்னு செவுத்த நார அடிக்கிறானுங்க...  அட எதுவுமே கிடைக்கலேன்னா பொறந்த நாள் கொண்டாடுரானுங்க... ஆன 35 வயசுக்கு மேல போகமட்டேன்கிரானுங்க....   ஏன் ஒலகத்துல இவனுங்க மட்டுந்தான் பொறந்தனுன்களா? நாமெல்லாம் வேஸ்ட்டா? 
    இப்புடி வெகுளிதனமா/முட்டாள்தனமா  இன்னும் ஆட்கள் இருகிறார்களா என்ன? இல்லை ஊடகங்கள் மிகைபடுத்துகின்றனவா? உண்மை தெரியவில்லை! அப்படி அதில்  ஐம்பது சதவீதம் உண்மை இருந்தாலும் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.   இவங்கள பத்தி சுருக்கமா சொல்லனும்னா,  வேலி ஓரமா போனா முள் குத்தும்னு தெரிஞ்சும் அங்க போயி முள்ள அவங்களே மிதிசிட்டு, முள்ளு குத்திடுச்சின்னு முள்ளு மேல பழி போடும் கூட்டம். சாதாரணமா சொந்தக்காரன் நேரா வந்து (ஏன் காந்தியா வரகூடதா) பத்திரிக்கை வச்சாலும் அதுல பாக்கு பணம் ஒத்த ரூபா வைக்கலைன்னு கல்யாணத்துக்கே  போகமட்டங்க, இவளவு ஏன் தன்னோட  மகளோ, மகனோ வேற சாதி, மதம்னு எதாவது மாத்தி காதல் கலயாணம் பண்ணா  கூட போகமட்டங்க. ஆனா தன்னோட குடும்பத்துக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத ஒரு மூன்றாவது மனிதன் இல்ல இல்ல முப்பதாவது மனிதன் என்று கூட சொல்ல முடியாத ஒரு நடிகனின்  படத்தை  முதல் நாளோ,தொடர்ந்து பல நாட்களாக வெறித்தனமாய்  பார்பதாலோ, கட் அவுட் வைப்பதாலோ,  பாலபிஷேகம் செய்வதாலோ தான்தான் மிக சிறந்த  ரசிகன்  என்று தனக்கு தானே  ஆஸ்கார்  விருது கொடுத்துக்கொள்ளும்  ஒரு ரசிகனிடம் என்னோட ஒரே   கேள்வி  இதுதாங்க, உண்மையிலேயே அந்த நடிகன் மற்றும் அவன் குடும்பம் நன்றாக  வாழவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன்தான் இதெல்லாம்  செய்தேன் என்று  நெஞ்சில்  கைவைத்து  சொல்லுங்கள் பார்காலம்?

    கண்ணா! கீழ விழுந்தா இதே பால நாளைக்கு உனக்கு ஊத்துவாங்க, வ்வ்வர்ர்டா... 
    சில படங்களை முதல்  நாள் முதல் காட்சியை பார்த்த  அனுபவத்தில் சொல்கிறேன் ஒருக்காலும் அப்படி  இருக்க  வாய்ப்பில்லை. ரசிகர்  மன்றகளுக்கு  நடிகர்கலாலோ  அல்லது வேறு எப்படியோ வரும் பணத்திற்காக  இருக்கலாம் ,   நண்பர்களுடன்  அல்லது  ஏரியா கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டு கும்மாளம் அடிக்கவும், பொது மக்களுக்கு  இடையூறு செய்வதும், குடித்துவிட்டு  ரகளை  செய்வதுமாய் சுற்றி  இருப்பவர்களிடம்  மலிவு விளம்பரம் செய்யவும்தான் ரசிகன் என்ற போர்வையை போர்த்திக்கொள்கிரார்கள்.காசு கொடுத்து டிக்கெட் வாங்குவதால் மட்டுமே அந்த நடிகனுக்கு மாமனகவோ,  மச்சானாகவோ அல்லது  சொந்தகாரனாகவோ  ஆயிட்டதா நெனச்சிகிட்டு  அவங்க  வீட்டுல  நடக்குற கல்யாணத்துக்கு  கூப்பிடல, காதுகுத்துக்கு கூப்பிடல, மஞ்சள்  நீராட்டு  விழாவுக்கு  குச்சி கட்ட கூப்பிடலன்னு  மனசு ஒடிஞ்சு, வாழ்க்கையே வெறுத்து, நொந்து நூலாயி தற்கொலை ரேஞ்சிக்கு யோசிச்சின்னா... உங்கள திருத்த ஒரு ரஜினி இல்ல ஒரு கோடி ரஜினி வந்தாலும் முடியாது.
    பேசாம ஒவ்வொரு புதுப்படம் ரிலீஸ் ஆகுற நாட்களையும்  அரசாங்க விடுமுறை தினமாக்கிடலாம்.
    யார் என்ன சொன்னாலும் நாங்க இப்படிதான் எங்களை நாங்களே நொந்து மனசு  ஒடிஞ்சு இந்த  மாதிரில்லாம்  புலம்புவதான்  எங்கள்  ரசிகர் மன்றங்களின்  நோக்கம்  என்பவர்களுக்கு மேலும் நீங்கள் எததெர்கெல்லாம் உங்களை நொந்து இன்புறலாம்  என்பதற்கு என்னால் ஆன சில டிப்ஸ்.....
    கமலஹாசனின் இதிஹாச ரசிகர்கள்,
    மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவிற்கு தங்களை அழைக்கவில்லை என்று வெகுண்டெழுந்து எலிசபெத் ராணியை எதிர்த்து போர் தொடுக்கலாம்.
    விஜயகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள்,
    கூட்டணி அமைக்க தங்களை அழைக்கவில்லை என நொந்துகொள்ளலாம்.
    விஜய்யின் நோயாளிகள் சாரி ரசிகர்கள்,
    டாக்டர் பட்டம் வாங்கியும் தங்களுக்கு வைத்தியம் பார்க்க அழைக்கவில்லை என்று மனமுடைந்து விச ஊசி போட்டுக்கொள்ளலாம்.
    அஜித்தின் அதிவேக  ரசிகர்கள்,
     F1  கார் பந்தயத்திற்கு தங்களை அழைக்கவில்லை என நொந்து 'தலை'யில் அடித்துக்கொள்ளலாம்.
    தமிழக அரசின்  இலவச தொலைகாட்சியில் கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகும் படங்களை மட்டுமே பார்க்கும் ரசிகர்கள்,
    கலைஞர் குடும்பத்தினரின்  படங்களுக்கு இலவச டிக்கெட் தந்து அழைக்கவில்லை என நொந்து தங்களுக்கு தானே கடிதம் அல்லது தந்தி அனுப்பிக்கொள்ளலாம். (சன் சேனல் ரசிகபெருமக்களும் இது பொருந்தும்).

    MGR - ஜெயலலிதா நடித்த படங்களை மட்டுமே இன்னுமும் பார்த்துகொண்டிருக்கும் புரட்சி ரசிகர்கள்,
    தேர்தலில் MLA சீட் கொடுக்கவில்லை என்று கொலைவெறி கொண்டு கொடைநாட்டில் போய் தற்கொலை செய்துகொள்ளலாம்.
    மேலும் என்னோட ஃபேவரட்.......

    கிங் பிஷர்  பியர் மட்டுமே குடிக்கும் குடிமகன்ங்கள் ஹி ஹி ரசிகர்கள், 
     தனது விமானத்தில் இலவசமாக அழைத்து செல்லாத மல்லையவை நொந்து கொள்ளலாம், மேலும் அவருக்கு போட்டியாக கள்ள சாராயம் காய்ச்சி நஷ்ட்டம் ஏற்படுத்தலாம்.  

    இது போல உங்களுக்கும் தெரிந்த வழிகளை கமெண்ட்ஸ் பகுதியில் கொடுக்கவும் இன்னும் பல ரசிகர்கள் பயன்பெறுவார்கள்.
    Related Posts with Thumbnails