கத்தார் - ஒரு அலசல்....1 -ல் கத்தாரை பற்றிய ஒரு அறிமுகமும், 1940களுக்கு பிறகு கத்தாரின் வளர்ச்சியும் அதற்கு முக்கிய காரணமான இயற்கை வாயு மற்றும் எண்ணை வளத்தை பற்றியும் அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி முறைகளையும் மேலும் பணிநிமிர்தமாக இங்கு வருவோர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முடிந்த அளவு சுருக்கமாக பார்த்தோம். இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் நானும், நம் நாட்டவரும், மற்ற நாடுகளை சேர்ந்த குறிப்பாக சொகுசானவர்கள் என நாம் கருதும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கே ஓடி வருவது ஏன்???????????
இதற்க்கு பல காரணங்கள் சொல்லலாம், ஆனால் முதல் முக்கியமான காரணம் வருமான வரி கிடையாது என்பதே!!!! உலகிலேயே வரி இல்லாத/குறைந்த நாடுகள் வரிசையில் கத்தார் முதலிடம் வகிக்கிறது. வரி அதிகம் வசூலிக்கும் நாடுகளில் முதல் பத்து இடங்களை பார்த்தால் ஐரோப்பிய நாடுகள்தான் அதிகமாக உள்ளது. இதனால்தான் இவர்கள் இங்கு பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஐரோப்பிய பாஸ்போர்ட் வைத்திருந்தால் போதும் இங்கு படிப்பு, தகுதி, திறமை, அனுபவம் இரண்டாம் பட்சம்தான். நேராக மேனேஜர்தான்! அது கிளீனிங் வேலையாயிருந்தாலும் சரி இவங்கதான் கிளீனிங் மேனேஜர். அப்படி ஒரு மதிப்பு இங்க. நம்ம ஆளுங்க முழு கால்சட்டை அணிந்து சென்றாலும் உள்ளே செல்லமுடியாத சில இடங்களில் இவர்கள் அரை கால்சட்டை மற்றும் செருப்புடனே உள்ளே செல்லலாம். (நம்ம ஊர்லையே இந்த கொடுமையெல்லாம் இருக்கும்போது இது ஒன்னும் பெரிதல்ல!!!) இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய செய்தி இவர்களில் பெரும்பாலனோர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. அதாவது பிறப்பால் இல்லாமல் வெறும் பாஸ்போர்டால் ஐரோப்பியர்கள் ஆனவர்கள். ஐரோப்பிய நாடுகளை சுற்றி இருக்கும் மற்ற நாடுகளில் இருப்பவர்கள் இங்கே உள்ளே சென்று (குறிப்பாக பிரான்ஸ் நாட்டை கூறலாம்) எப்படியாவது பாஸ்போர்ட் வாங்கி விடுவார்கள் அதற்கு பல வழிகள் கூறுகின்றனர். ஐரோப்பிய பாஸ்போர்ட் காரர்களுக்கு என தனி சம்பள நிர்ணயம் செய்கிறார்கள் பிறகென்ன ராஜ வாழ்க்கைதான். கத்தாரில் வரி கிடையாது என்பது இவர்களுக்கோ , மற்ற நாட்டவர்க்கோ பெரிய விஷயமாக இருக்கலாம் ஆனால் நமக்கு அதுவும் ஒரு சாதாரண விஷயம்தான்! ஏன்னா நாமதான் நம் நாட்டிலேயும் வரி கட்டுவதிலேயே! நம்மில் பலபேருக்கு இந்தியாவின் வரி சட்டங்களை பற்றி தெரியாது . அப்படியே தெரிந்துகொள்ள ஆசைபட்டாலும் வரி கட்டாமல் எப்படி ஏமாத்தாலம் என்பதைத்தான் கற்றுக்கொள்ள்வோம். (ஸ்ஸ்ஸ்ஸ்.... உண்மை சுடுது) அதனால் நம்மவர்களுக்கு அதையும் தாண்டி இருக்கும் சில காரணங்கள் இருக்க வேண்டும் அது என்ன?
தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக நம்மவர்கள் இங்கு வருவதற்கு காரணம் உலகறிந்ததே! குறைந்த பட்சம் ஏதாவது படித்துவிட்டு வருபவர்கள் -மக்கள் தொகை, வேலையில்லா திண்டாட்டம், படிப்புக்கு தகுந்த வேலை. வேலைக்கு தகுந்த சம்பளம் இப்படி ஒரு பக்கம் இருக்கிறது. இந்த பிரிவில் வருபவர்கள் தப்பித்தார்கள். எதிர்பார்த்த வேலை, கைநிறைய சம்பளம் சொகுசான வாழ்கை என்று கூறமுடியாவிட்டாலும் ஓரளவிற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்துவிடும். ஆனால் படிக்காமல் வறுமை, குடும்ப சூழல், அறியாமை போன்ற காரணங்களால் இங்கு வருபவர்களுக்கு இது பூலோக நரகம்தான். ஆனால் அப்படி வருவோர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம் குறிப்பாக இந்தியர்கள். இதற்கு இவர்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என வட்டிக்கு பணம் வாங்கி ஏஜெண்டுகளிடம் கொடுத்து வருகிறார்கள். இருந்தும் சொற்ப சம்பளம், பல பேர்க்கு சொன்ன வேலை/சம்பளம் கிடைக்காது. 12 முதல் 16 மணி நேரம் வேலை. உணவு,தங்கும் இடம், போக்குவரத்து என ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சில இடங்களில் ஐந்து ஆண்டுகள் கழித்துதான் ஊருக்கு திரும்ப முடியும் என்பது வரை இவர்கள் படும் பாட்டை இது போல பத்து பதிவு போட்டாலும் பத்தாது.
"தோஹா" கத்தாரின் தலைநகரம் மட்டுமல்ல கத்தாரின் ஒரே நகரமும் கூட! இங்கு மட்டுமே பல அடுக்கு மாடி கட்டிடங்களை காணலாம் மற்றபடி இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில ஷாப்பிங் மால் இருக்கும். (ஷாப்பிங் மால்னா தமிழ்ல பண் கடை கட்டிடமாம் ரொம்ப சிரமப்பட்டு கண்டுபுடிச்சேன்). உள்ளநாட்டு மக்களில் 80% க்கும் அதிகமானோர் இங்குதான் வசிக்கின்றனர். வெறும் 132sq/km பரப்பளவில் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் இங்கேயே வசிக்கின்றனர் . மிச்சமிருக்கும் 11,305sq/km பரப்பளவில் கிட்டதட்ட ஏழு லட்சம் மக்களும், கட்டுமான பணிகளுமே நிறைந்ததுதான் கத்தார்.
"தோஹா" கத்தாரின் தலைநகரம் மட்டுமல்ல கத்தாரின் ஒரே நகரமும் கூட! இங்கு மட்டுமே பல அடுக்கு மாடி கட்டிடங்களை காணலாம் மற்றபடி இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில ஷாப்பிங் மால் இருக்கும். (ஷாப்பிங் மால்னா தமிழ்ல பண் கடை கட்டிடமாம் ரொம்ப சிரமப்பட்டு கண்டுபுடிச்சேன்). உள்ளநாட்டு மக்களில் 80% க்கும் அதிகமானோர் இங்குதான் வசிக்கின்றனர். வெறும் 132sq/km பரப்பளவில் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் இங்கேயே வசிக்கின்றனர் . மிச்சமிருக்கும் 11,305sq/km பரப்பளவில் கிட்டதட்ட ஏழு லட்சம் மக்களும், கட்டுமான பணிகளுமே நிறைந்ததுதான் கத்தார்.
கத்தாரில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதியை பற்றி கட்டாயம் இங்கு சொல்லியாகவேண்டும். மூன்று வார்த்தையில் சொல்லிடலாம்... மொக்கை!மொக்கை!! மொக்கை!!! ஆம் தனக்கென வாகனம் இல்லாதவர்கள் வெளியில் செல்வதென்பது இயலாத ஒன்று. நகரத்திற்குள் ஓரளவு பரவாயில்லை ஆனால் மற்ற கிராமங்களில் இருப்பவர்கள், சைட்டில் இருப்பவர்கள் நிலைமை??? அவர்கள் பணி புரியும் கம்பெனி எப்பொழுது வண்டி அனுப்புகிறதோ தலைஎழுத்து அப்போதுதான் வெளியே செல்லமுடியும், தேவையானவற்றை வாங்க முடியும்.
பொதுவாக அனைத்து கம்பெனிகளும் வார கடைசி (அதாவது இங்கு வியாழ கிழமை மாலை தொடங்கி வெள்ளிகிழமை மாலை வரை) தோஹாவை நோக்கி பேருந்தை இயக்குவர், அவரவர் பணியாளர்களுக்கு மட்டும். ஆறு நாட்கள் அடைபட்டு கிடந்தவர்கள் திறந்துவிட்டால் அவ்வளவுதான் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தோஹாவிற்கு திருவிழாகோலம் பூட்டி திக்குமுக்காட வைத்துவிட்டுத்தான் திரும்புவார்கள். அன்றைய நிலையில் பெட்டிகடைகளில் தண்ணீர் கிடைப்பதே கஷ்டம். இதுல சாப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம். நான் வெளியில் தங்கி இருந்தவரை பல வெள்ளி இரவு பட்டினிதான். கத்தார் என்றவுடன் இங்கு வசித்த பலருக்கு (எனக்கும்) இந்த பிரச்சனைதான் முதலில் ஞாபகம் வரும் என்பதற்கு போன பதிவின் கமெண்ட்ஸ் பகுதியில் ராஜ்குமார் அவர்களின் கமெண்ட்ஸ் ஒரு உதாரணம்.
பொதுவாக அனைத்து கம்பெனிகளும் வார கடைசி (அதாவது இங்கு வியாழ கிழமை மாலை தொடங்கி வெள்ளிகிழமை மாலை வரை) தோஹாவை நோக்கி பேருந்தை இயக்குவர், அவரவர் பணியாளர்களுக்கு மட்டும். ஆறு நாட்கள் அடைபட்டு கிடந்தவர்கள் திறந்துவிட்டால் அவ்வளவுதான் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் தோஹாவிற்கு திருவிழாகோலம் பூட்டி திக்குமுக்காட வைத்துவிட்டுத்தான் திரும்புவார்கள். அன்றைய நிலையில் பெட்டிகடைகளில் தண்ணீர் கிடைப்பதே கஷ்டம். இதுல சாப்பாடு பற்றி கேட்கவே வேண்டாம். நான் வெளியில் தங்கி இருந்தவரை பல வெள்ளி இரவு பட்டினிதான். கத்தார் என்றவுடன் இங்கு வசித்த பலருக்கு (எனக்கும்) இந்த பிரச்சனைதான் முதலில் ஞாபகம் வரும் என்பதற்கு போன பதிவின் கமெண்ட்ஸ் பகுதியில் ராஜ்குமார் அவர்களின் கமெண்ட்ஸ் ஒரு உதாரணம்.
இப்படியொரு நிலைமை இருந்தாலும் 2022 உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது கத்தார். வாழ்த்துக்கள் ஆனால் ஒரே ஒரு சந்தேகம், உதாரணதிற்கு ஒரு பத்தாயிரம் பார்வையாளர்கள் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஒரு வாரத்திற்குள் வந்து குவிந்தார்கள் என்றால் அவர்களுக்கு தனித்தனியாக வாகனங்கள் ஏற்பாடு செயவார்களா? அல்லது அனைவரும் மைதானத்திலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதானா? போகட்டும் அதற்கு இன்னும் ஒரு மாமாங்கம் இருக்கிறது அதற்குள் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மனமிருந்தால் மார்கம் உண்டு என்பார்கள் இவர்களை பார்த்தால் பணம் இருந்தால் மார்கம் உண்டு என சொல்ல தோன்றுகிறது எனக்கு.
சில முக்கியமான விஷயங்கள்:
- உலகத்தின் ஒரு சில மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.
- டிசம்பர்-18-1878 முதல் இன்று வரை அல்-தானி என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.
- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-18 கத்தார் தினமாக (நேஷனல் டே) கொண்டாட படுகிறது.
- இஸ்லாம் மதத்தை கடைபிடிக்கும் இவர்களின் தாய் மொழி அரபிக் ஆகும்.
- எங்கு சென்றாலும் ஆண்களும் பெண்களும் தங்களது பாரம்பரிய உடை அணிந்து செல்வது ஒரு சிறப்பாக கூறலாம். (நாம எப்படி? எத்தனை பேருக்கு வேஷ்டி ஒழுங்கா கட்ட தெரியும்?)
- வாயு மற்றும் எண்ணை வளங்கள் கண்டுபிடிக்கும் முன்பு வரை மீன்பிடித்தல் மற்றும் முத்து எடுத்தல் (ரஜினி படம் இல்லைங்க) இவைதான் இவர்களின் பிரதான தொழில்.
H .H .Hamad bin Khalifa Al Thani |
- கிட்டத்தட்ட 1966 வரை இங்கு நம் இந்திய ரூபாய் நோட்டுகள்தான் (gulf rupees) புழக்கத்தில் இருந்திருக்கிறது.
- தற்போது கத்தார் ரியால்ஸ் நடைமுறையில் உள்ளது (1QR = INR 12 ~ 13 )
- ஒட்டகம் மற்றும் குதிரை ரேஸ் இங்கு பழமையான மற்றும் பிரபலமான விளையாட்டும் கூட.
- 2006 ம் ஆண்டு 15 ஆம் ஆசிய விளையாட்டு போட்டிகள் கத்தாரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்காக பல புதிய விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டன.
- 2011 ம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளது.
கத்தார் ஒரு காலத்தில்......
கத்தாரை பற்றி நான் கேட்டு, படித்து, பார்த்து அறிந்துகொண்ட அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அடுத்த பதிவும் கத்தார பத்திதாங்க! இங்கு இருக்கும் ஒரு முக்கியமான பண் கடை கட்டிடம் அதாங்க ஷாப்பிங் மால் பற்றியது. உங்களுக்காக நானே எடுத்த சில புகைப்படங்களுடன்......