சமீப காலமாக எனது உறவினர்களுடனோ,நண்பர்களுடனோ எப்போது பேசினாலும் அவர்கள் எனக்கு பெண் பார்ப்பதை பற்றி அல்லது திருமணத்தை பற்றி பேசி என்னை ஒரு குழப்பமான நிலையில் விட்டுவிடுகிறார்கள்.
அப்போதெல்லாம் "பொண்ண நீ பாக்குறது இருக்கட்டும், பொண்ணு ஒன்ன பாத்துடபோது" என்ற கவுண்டமணி செந்திலிடம் கூறும் வசனம் நினைவில் வந்து போகும்.
கண்ணில் காட்சிகள் தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடுமோ? என்ற பயத்தில் புலம்பிய சில புலம்பல்கள்......
கவிதைகளில் மட்டும் வாழ்கிறாள்!
யார் அவள்?
அவள் இல்லாமல்
என் கவிதைகளுக்கு அர்த்தம் இல்லை! அவளை பற்றி
நான் சொல்லாதது கவிதைகளே இல்லை!
யார் அவள்? கவிதை எழுத
உன்னை பற்றி சிந்திக்க வேண்டும்...
காதல் வர
உன்னை முதலில் சந்திக்க வேண்டும்...
சந்திக்கவும், சிந்திக்கவும் காத்திருக்கிறேன்! யார் அவள்?
என் தோட்டத்து மொட்டுகளும்
காத்திருக்கின்றன...
அவள் கூந்தலில் மலர்வதற்காக!
யார் அவள்?
3 comments:
நல்லருக்கு செந்தில்
@வார்த்தை
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி. தொடர்ந்து வாங்க.....
போங்க தம்பி...போங்க.
அண்ணே லவ் மூடுல இருக்கிறாரு.
Post a Comment